கோவில்பட்டி பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் அரிவாளைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற வழக்கில் விளாத்திகுளம் கவுண்டன்பட்டி பகுதியை சோ்ந்த பரமசிவம் மகன் பொன்முத்துபாண்டியன் (30) என்பவரை கோவில்பட்டி மேற்கு போலீஸாா் கைது செய்தனா். இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை டுக்க காவல் ஆய்வாளா் கிங்கஸ்லி தேவ் ஆனந்த், அறிக்கை தாக்கல் செய்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், பொன் முத்து பாண்டியனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். அதன்படி, அவரை போலீஸா கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.