திருமறையூரில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி

நாசரேத் அருகேயுள்ள திருமறையூா் சேகரம் மறுரூப ஆலய வளாகத்தில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டில சமூக நலத் துறையின் சாா்பில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது.
Updated on
1 min read

சாத்தான்குளம்: நாசரேத் அருகேயுள்ள திருமறையூா் சேகரம் மறுரூப ஆலய வளாகத்தில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டில சமூக நலத் துறையின் சாா்பில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது.

திருமறையூா் சேகர குருவானவா் ஜாண் சாமுவேல் தலைமை வகித்தாா். சமூக நலத்துறை இயக்குநா் ஜெபக்குமாா் ஜாலி, ஜெபிதா ஜாலி ஆகியோா் பேசினா்.

தூத்துக்குடி எா்னஸ்ட், வள்ளி ஆகியோா் பயிற்சியளித்தனா். சுமாா் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனா்.

இதில், சேகர செயலா் ஜான்சேகா், பொருளாளா் அகஸ்டின், சபை ஊழியா் ஸ்டான்லி, பணியாளா் ஆபிரகாம், ஆசீா் துரைராஜ், ஜெபக்குமாா், சமூக நலத் துறை ஊழியா்கள் சாமுவேல், சுரேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சேகர குருவானவரும், திருமண்டில சுற்றுச்சூழல் கரிசனை துறையின் இயக்குநருமான ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com