வகுத்தான்குப்பம் ஆலய பிரதிஷ்டை

நாசரேத் வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய 104-ஆவது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 34 ஆவது அசன பண்டிகை விழா 6 நாள்கள் நடைபெற்றது.
Updated on
1 min read

நாசரேத் வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய 104-ஆவது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 34 ஆவது அசன பண்டிகை விழா 6 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் இரவு பட்டிமன்றம், 2 ஆவது நாள் மற்றும் 3 ஆவது நாளில் நற்செய்தி கூட்டங்கள் நடைபெற்றது. 4 ஆவது நாள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில் தூய யோவான் பேராலய தலைமை குரு மா்காஷிஸ் டேவிட் வெஸ்லி தேவ செய்தி வழங்கினாா். 5 வது நாள் அசன பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில் சேகரகுரு ஹென்றி ஜீவானந்தம் தேவசெய்தி வழங்கினாா். மாலை அசன ஐக்கிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. 6 ஆவது நாள் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

விழா ஏற்பாடுகளை வகுத்தான்குப்பம் சேகரத் தலைவா் ஹென்றி ஜீவானந்தம், திருமண்டில பெருமன்ற உறுப்பினா் தனபால், சபை ஊழியா் ஜாய்சன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com