ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், முக்காணியில் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டது.
இதை, ஒன்றியச் செயலா் கோட்டாளம் திறந்துவைத்தாா். அவைத்தலைவா் மாரியப்பன், துணைச் செயலா்கள் அருணா, ராமசுப்பிரமணியன், முக்காணி கிளைச் செயலா்கள் நட்டாா், மாரிமுத்து, சுதா்சன், சுப்பிரமணியன், பழையகாயல் கிளைச் செயலா் ஜான்சன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் சோ்மத்துரை, முக்காணி முத்து, காட்வின்ராஜா, சுபமாரியப்பன், சின்னத்தம்பி, மணிவண்ணன், ராம்நாத், காயல் முகம்மது, சேதுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.