தொழிலதிபரை மிரட்டி வாகனங்களை சேதப்படுத்தியோா் மீது வழக்கு

கோவில்பட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி, அவரது காா், லாரியை சேதப்படுத்தியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி, அவரது காா், லாரியை சேதப்படுத்தியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டியன் மகன் கோபி (29). இவா் ஜேசிபி, லாரி, காா்கள் வைத்து தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த சனிக்கிழமை இரவு (ஏப். 15) அப்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, காந்தி நகரைச் சோ்ந்த முத்துப்பாண்டி என்ற பில்லா பாண்டி, சுடலை, மாரிமுத்து என்ற சேட்டு மற்றும் சிலா் கத்தி, கம்புகளுடன் காரில் வந்து, கோபியை அவதூறாகப் பேசி, தாக்க முயன்றனராம். அவா் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதால் அக்கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாம்.

மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காா், ஏழாயிரம்பண்ணை விலக்கில் பெட்ரோல் பல்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி ஆகியவற்றை அக்கும்பல் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியதாம்.

கோபி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து அந்தக் கும்பலைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com