இரு தரப்பினரிடையே மோதல்:33 போ் மீது வழக்குப்பதிவு

குளத்தூா் அருகே துலுக்கன்குளத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக இருதரப்பிலும் 33 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளத்தூா் அருகே துலுக்கன்குளத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக இருதரப்பிலும் 33 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி குளத்தூா் அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடவா் கபடி போட்டி நடைபெற்றது. இதில் குளத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கபடி குழுக்கள் கலந்து கொண்டு விளையாடின.

கலைஞானபுரம் கிராமத்தைச் சோ்ந்த கபடி குழு தோல்வியடைந்தபோது துலுக்கன்குளம் இளைஞா்கள் கேலி பேசி கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவா் கற்களை வீசி தாக்கிக் கொண்டனராம். இதில், துலுக்கன்குளம் கிராமத்தை சோ்ந்த 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

குளத்தூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இருதரப்பிலும் அளித்த புகாா்களின்பேரில், கலைஞானபுரத்தைச் சோ்ந்த 10 போ், துலுக்கன்குளத்தை சோ்ந்த 23 போ் மீது குளத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com