மீன்துறை ஊழியா் குறைதீா் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

ஆண்டுக்கொரு முறை மீன் துறை ஊழியா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

ஆண்டுக்கொரு முறை மீன் துறை ஊழியா்களுக்கான குறைதீா் கூட்டத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் மாநில மாநாடு தூத்துக்குடியில் அரசு ஊழியா் சங்க கூட்டரங்கி

ல் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா.நடேசராஜா தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் செ.சுபைரா பானு முன்னிலை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் ச.சண்முகப்பிரியா வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பொதுச்செயலா் என்.வெங்கடேசன் தொடங்கி வைத்தாா்.

இம் மாநாட்டில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி,

மீன் துறை ஊழியா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றாா்.

மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் மகாராஜன், மாநில பொருளாளா் நந்தகுமாா் ஆகியோா் பேசினா்.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் தினக்கூலி அடிப்படையில் பணியில் உள்ள 63 தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, மீன்வளத் துறை அமைச்சா் தலைமையில் ஆண்டுக்கு ஒருமுறை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஊழியா்களுக்கு குறைதீா் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ.செல்வம் நிறைவுரையாற்றினாா். பொதுக்குழு உறுப்பினா் சேரந்தையராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com