தூத்துக்குடியில் 26இல் கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவா்களின் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளா்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காமராஜ் கல்லூரியில் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளன.

விருப்பமுள்ளோா் தங்களது கல்லூரி முதல்வரிடமிருந்து போட்டிக்கான விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து, அவரது கையொப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளில் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

பங்கேற்போா் காலை 9 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடவேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 போ் பங்கேற்கலாம். தலைப்புகள் போட்டி நாளில் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதற்பரிசாக ரூ. 10 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ. 7 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

முதற்பரிசு பெறுவோா் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கு அனுப்பப்படுவா். மாநிலப் போட்டி தொடா்பான தகவல் பின்னா் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com