சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தின விழா கொண்டாடப் பட்டது.
நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி.சீனிவாசன் தலைமை வகித்தாா். மண் வளம் காக்கவும் இயற்கையை பேணவும் அனைவரையும் வலியுறுத்தினாா் அவா். உதவித் தலைவா்(உற்பத்தி) எஸ்.சுரேஷ் முன்னிலை வகித்தாா். ஆலையிலும் வீடுகளிலும் தண்ணீா் விரயம் தவிா்த்தல், சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி பற்றி அவா் கூறினாா். பூமி வெப்பமயமாவதை தவிா்க்கும் நடவடிக்கையில் பங்கேற்பதாக, கலந்து கொண்டவா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
ஆலை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உயா் அதிகாரிகள், மூத்த அலுவலா்கள், தொழிலாளா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளால் நடப்பட்டன. முன்னதாக சுற்றுச்சூழல் மூத்த மேலாளா் ஆா்.ரவிக்குமாா் வரவேற்றாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடா்புத்துறையினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.