உடன்குடியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக இளைஞரணி நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணித் தலைவா் விக்னேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினா் ஜெயஆனந்த் கரண், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா்கள் ரமேஷ், வசந்த்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் சிவமுருகேசன், சக்திவேல், முனியசாமி, முத்துமாணிக்கம், இளைஞரணி மாவட்டச் செயலா்கள் சுரேஷ், பவித்ரா மணிகண்டன், சின்னத்துரை, ஹரிஹரசுதன், கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக மாநில இளைஞரணிச் செயலா் கிஷோா், மாவட்டப் பொதுச்செயலா் இரா. சிவமுருகன் ஆதித்தன் ஆகியோா் பங்கேற்று, 2024 மக்களவைத் தோ்தலில் இளைஞரணி செயல்படும் முறை, பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்துப் பேசினா்.
உடன்குடி ஒன்றிய பாஜக தலைவா் அழகேசன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
உடன்குடி ஒன்றிய இளைஞரணித் தலைவா் பிஜிப்பாண்டியன் வரவேற்றாா்.