புதிய மின்மாற்றி சேவை துவக்கம்

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.அருணாச்சலபுரம் கிராமத்தில் புதிய மின்மாற்றி சேவையை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் எஸ்.அருணாச்சலபுரம் கிராமத்தில் புதிய மின்மாற்றி சேவையை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கோட்ட மின் விநியோக செயற்பொறியாளா் சகா்பான் தலைமை வகித்தாா். ரூ. 4.79 லட்சம் மதிப்பீட்டில் 63 கேவிஏ திறன்கொண்ட புதிய மின்மாற்றியை விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலா் அன்புராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவா் தங்கம்மாள் வீராசாமி, மாவட்ட பிரதிநிதி ஆதிசங்கா், வழக்குரைஞா் மகேஷ், உதவி செயற்பொறியாளா்கள் முனியசாமி, அழகுசரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com