பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்கத்தினா் கோவில்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் அந்தோணிசாமி தலைமை வகித்தாா். இணைச் செயலா் செல்லையா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரிமுத்து, மாநில பொதுச்செயலா் லட்சுமிநாராயணன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணை பொதுச்செயலா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் பிரான்சிஸ், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் செல்லத்துரை, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் மதிவாணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com