தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டது.
உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம், மலேரியா நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் நோய்க்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்துதல் ஆகியவை ஆகும்.
அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் ஆணையா் தினேஷ்குமாா் தலைமையில் அரசு அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மலேரியா இல்லாத நிலையை அடைய புதிய முயற்சிகளை செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில், மாநகராட்சி நகா் நல அலுவலா் சுமதி, உதவி ஆணையா் சேகா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.