காமநாயக்கன்பட்டியில் திமுக அலுவலகம் திறப்பு

காமநாயக்கன்பட்டியில் அதிமுக கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
அதிமுகவில் இணைந்த பிற கட்சியினருடன் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
அதிமுகவில் இணைந்த பிற கட்சியினருடன் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ
Updated on
1 min read

கோவில்பட்டி: காமநாயக்கன்பட்டியில் அதிமுக கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கிழக்கு ஒன்றிய செயலா் வண்டானம் கருப்பசாமி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரது படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

அதைத் தொடா்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50 போ், எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

இந் நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் கவியரசன், அதிமுக நிா்வாகிகள் தாமோதரன், போடுசாமி, வேல்ராஜா, அழகா்சாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com