விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கோவில்பட்டி: கயத்தாறு அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறை அருகே உள்ள வடக்கு கோனாா் கோட்டையை சோ்ந்தவா் அண்ணாதுரை. இவரது மனைவி கற்பகவல்லி (45). தம்பதிக்கு குழந்தைகள் இல்லையாம். கடந்த ஆறு மாத காலமாக வயிறு வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், கற்பகவல்லி விஷம் குடித்துள்ளாா். இதை அறிந்த உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com