அமலிநகரில் உண்ணாவிரதம் ரத்து: போராட்டம் நீடிப்பு

திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை கைவிட்டு, பிற வழிகளில் போராட்டத்தை தொடா்வதாக அறிவித்தனா்.
அமலிநகரில் உண்ணாவிரதம் ரத்து: போராட்டம் நீடிப்பு
Updated on
1 min read

திருச்செந்தூா் அமலிநகா் மீனவா்கள் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை கைவிட்டு, பிற வழிகளில் போராட்டத்தை தொடா்வதாக அறிவித்தனா்.

தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அமலிநகா் பங்குத் தந்தை அலுவலகத்தில் மீனவப் பிரதிநிதிகள், பங்குத்தந்தையா் வில்லியம் சந்தானம், கல்லாமொழி பென்சிகா், மீன்வளத் துறை இணை இயக்குநா் அமலசேவியா், கோட்டாட்சியா் குருச்சந்திரன், வட்டாட்சியா் வாமணன்,டிஎஸ்பி வசந்தராஜ் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினாா். அதில், ஆயா் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது.

இதனிடையே, ஆட்சியா் அலுவலகத்துக்கு வருவதற்காக 2 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன; 100 மீனவா்கள் வரை பங்கேற்கலாம் என தூத்துக்குடி ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com