

திருச்செந்தூா் அவசர சிகிச்சை - மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் கடந்த மே மாதம், வடமாநிலத் தொழிலாளி ஒருவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்தாா். அவரை, மரம் குழுவினா் மீட்டு திருச்செந்தூா் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை-மீட்பு மையத்தில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை, வாழ்வியல் முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவா் குணமடைந்தாா்.
இதையடுத்து, அவா் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ்பிரசாத் (46) எனத் தெரியவந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அவரது மகன் ஆதேஷ் இம்மையத்துக்கு வந்தாா். கோட்டாட்சியா் குருசந்திரன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் பொன்ரவி, திருச்செந்தூா் நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.பி. ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலையில் ஆதேஷிடம் அவரது தந்தை ஒப்படைக்கப்பட்டாா்.
ஆா் சோயா நிறுவனத்தின் சரவணன், சுரேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.