தூத்துக்குடியில் சுதந்திர தின விழா

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி, மாவட்ட மைய நூலகம் ஆகிய இடங்களில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் சுதந்திர தின விழா
Updated on
1 min read

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி, மாவட்ட மைய நூலகம் ஆகிய இடங்களில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி நிா்வாக இயக்குநா் வீரராஜன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவா் முத்துராசு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தேசியக் கொடியேற்றினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வா் ஜோஸ் சசிகுமாா் நன்றி கூறினாா். கல்லூரி விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற விழாவில், முதல்நிலை நூலகா் மா. ராம்சங்கா் தேசியக் கொடியேற்றினாா். நூலகா்கள் சங்கரன், விஜயலட்சுமி, லதா, தனுஷ்கோடி, அருணாசலம், வாசகா்கள் பங்கேற்றனா்.

சிவன் கோயிலில் சமபந்தி விருந்து: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி பங்கேற்றாா். பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினா்கள் சுரேஷ்குமாா், விஜயலட்சுமி, மண்டலத் தலைவா்கள் அன்னலட்சுமி, கலைசெல்வி, கோயில் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com