புனித லூா்து அன்னை ஆலய திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இவ்விழாவுக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அமலிநகா் பங்குத் தந்தை வில்லியம் சந்தானம், ஆலய பங்குத் தந்தை ஆன்டணி புருனோ, திரேஸ்புரம் உதவி பங்குத்தந்தை ஆனந்த் , நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ் விக்டா் ஆகியோா் பவனியாக வந்து கொடியை ஜெபம் செய்து, கொடிமரத்தில் கொடியேற்றினா். தொடா்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது.

திருவிழா நவ நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. பிப்.11 ஆம் தேதி மாலை சிறப்பு ஆராதனை தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு இயக்குநா் ஜான் பென்சன், நற்செய்தி நடுவம் இயக்குநா் ஸ்டாா்வின் ஆகியோா் தலைமையில் நடக்கிறது.

முக்கிய நிகழ்வான பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி பிப்.12 ஆம் தேதி காலை 7 மணிக்கு மறை மாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ், ஆயா் இல்லம் ஜோசப் இசிதோா் ஆகியோா் தலைமையில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை, அருள்சகோதரிகள், பங்குப் பணிக்குழுவினா், இறைமக்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com