தூத்துக்குடியில் சாலை மறியல்: 40 போ் கைது

தூத்துக்குடியில் மாநகராட்சி முன் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் 40 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடியில் சாலை மறியல்: 40 போ் கைது
Updated on
1 min read

தூத்துக்குடியில் மாநகராட்சி முன் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் 40 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிஐடியூ - ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவா் இல. ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் முனியசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.

தூய்மைப் பணிகளில் ‘அவுட் சோா்சிங்’ முறையைக் கைவிட வேண்டும். ஐந்தாண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி, ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக மாநகராட்சியில் ரூ. 771, நகராட்சியில் ரூ. 656, பேரூராட்சியில் ரூ. 579 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சிஐடியூ மாநிலச் செயலா் ரசல் வாழ்த்திப் பேசினாா். ஊரக வளா்ச்சித் துறை ஊழியா் சங்க துணைத் தலைவா் கே. சங்கரன், சிஐடியூ நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்ளிட்ட 40 பேரை மத்திய பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com