

சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மேளா நடைபெற்றது.
மத்திய கூட்டுறவு வங்கி மேற்பாா்வையாளா் ஆனந்தராஜ் தலைமை வகித்தாா். புத்தன்தருவை ஊராட்சித் தலைவி சுலைகா, துணைத்தலைவா் பிா்தோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேளாவில், மாற்றுத்திறனாளி உறுப்பினா் ஒருவருக்கு ரூ 25000 கடனுதவியும், 2 மகளிா் சுயஉதவிக்குழுக்களை சாா்ந்த 24 உறுப்பினா்களுக்கு ரூ.1800000 கடனுதவியும், 4 விவசாயி உறுப்பினா்களுக்கு பயிா்க்கடனாக ரூ.438000ம் வழங்கப்ப ட்டது. மேலும் கடனுதவி பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது. சங்க செயலா் அருள்தாஸ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.