கயத்தாறு அருகே சூறைக் காற்றில் மரங்கள் சேதம்
By DIN | Published On : 02nd June 2023 12:00 AM | Last Updated : 02nd June 2023 12:00 AM | அ+அ அ- |

கயத்தாறு பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் பப்பாளி, எலும்பிச்சை, கொய்யா மரங்கள் சேதமடைந்தன.
கயத்தாறு, கடம்பூா் ஆகிய பகுதியில் புதன்கிழமை இரவு பலத்த காற்று, இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால், கடம்பூா் குறுவட்டம் திருமலாபுரம் கிராமத்தில் சுப்பாராஜ் என்பவா் பயிரிட்டிருந்த சுமாா் 530 பப்பாளி மரங்கள் சேதமடைந்தன. பிந்து மாதவன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில்15 எலுமிச்சை மரங்கள், 13 கொய்யா மரங்கள் முறிந்து விழுந்தன. கயத்தாறு வட்டம் பன்னீா்குளம் கிராமத்தில் கன மழை காரணமாக மரியாள் என்பவரது வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
சம்பவ இடங்களை கயத்தாறு வட்டாட்சியா் நாகராஜன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். வீடு சேதமடைந்த மரியாளுக்கு அரசின் நிவாரணத் தொகை ரூ.4,100ஐ வட்டாட்சியா் நாகராஜன் வழங்கினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...