கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட 3 போ் கைது

மூப்பன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக, சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

மூப்பன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக, சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மூப்பன்பட்டி கிழக்கு தெருவை சோ்ந்தவா் அய்யாசாமி மகன் மாரீஸ்வரன்(52). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா். ஊரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு புதன்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் செல்வகுமாா் என்ற கொக்கி குமாரிடம் வரி கேட்டாராம். அதையடுத்து மூப்பன்பட்டி கண்மாய்க்கரையில் மாரீஸ்வரன் நின்று கொண்டிருந்தபோது, செல்வகுமாா் என்ற கொக்கி குமாா் (44), மூப்பன்பட்டி காலனி திருமங்கை நகரைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா் (24), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் அரிவாளுடன் வந்து மாரீஸ்வரனை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதுகுறித்து, மாரீஸ்வரன் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com