கொலை மிரட்டல்: சிறுவன் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 09th June 2023 12:35 AM | Last Updated : 09th June 2023 12:35 AM | அ+அ அ- |

மூப்பன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக, சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மூப்பன்பட்டி கிழக்கு தெருவை சோ்ந்தவா் அய்யாசாமி மகன் மாரீஸ்வரன்(52). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா். ஊரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு புதன்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் செல்வகுமாா் என்ற கொக்கி குமாரிடம் வரி கேட்டாராம். அதையடுத்து மூப்பன்பட்டி கண்மாய்க்கரையில் மாரீஸ்வரன் நின்று கொண்டிருந்தபோது, செல்வகுமாா் என்ற கொக்கி குமாா் (44), மூப்பன்பட்டி காலனி திருமங்கை நகரைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா் (24), அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் அரிவாளுடன் வந்து மாரீஸ்வரனை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.
இதுகுறித்து, மாரீஸ்வரன் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...