கோவில்பட்டி என்இசி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சாா்பில் டிஎஸ்டி-சொ்ப் நிதியுதவியுடன் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சாா்பில் டிஎஸ்டி-சொ்ப் நிதியுதவியுடன் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

‘நானோ கட்டமைக்கப்பட்ட பொருள்களின் சோ்க்கை உற்பத்தியில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு தொடக்க விழாவுக்கு, கல்லூரி முதல்வா் கே. காளிதாச முருகவேல் தலைமை வகித்தாா்.

ஹைதராபாத்தில் உள்ள சா்வதேச மேம்படுத்தப்பட்ட தூள் உலோகவியல் மற்றும் புதிய பொருள்கள் மையத்தின் விஞ்ஞானி மற்றும் தலைவா் ரவி என். பாத்தே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலோக சோ்க்கை உற்பத்தி குறித்து விளக்கிப் பேசினாா்.

சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை மூத்த பேராசிரியா் என். செல்வகுமாா், ஐஐடி பாலக்காடு இயந்திர பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் டி.கேசவன், சென்னை ஐஐடி-யின் இயந்திர பொறியியல் துறை இணைப் பேராசிரியா் என். அருணாசலம், திருச்சி என்ஐடி உற்பத்தி துறை பேராசிரியா் எம். துரைச்செல்வம், பெங்களூரு டிஆா்டிஒ வின் கூட்டு இயக்குநா் டீ ராம் பிரபு ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இயந்திர பொறியியல் துறை தலைவா் கே. மணிசேகா் வரவேற்றாா்.

உதவிப் பேராசிரியா் ஆா். விக்னேஷ் குமாா் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநா் எஸ்.சண்முகவேல், இயந்திரவியல் துறைத் தலைவா், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com