சாத்தான்குளம் ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் விலக்கு பகுதியில் உள்ள பயணியா் நிழற்குடையில் சேதமான இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என கிராமத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை உறுப்பினா் நிதியில்,
இரும்பிலான இருக்கைகளுடன் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டது.
நாளடைவில் இரும்பிலான இருக்கை சேதமடைந்ததையடுத்து, அவை அகற்றப்பட்டன. தற்போது ஒரு இருக்கை மட்டுமே எஞ்சியுள்ளது.
பயணிகள் பயன்படுத்தும் வகையில் மீண்டும் இருக்கைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.