தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் காரணமாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல் காரணமாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ‘மோக்கா’ புயலாக உருவாகியுள்ளது. இதனால், பலத்த மழை பெய்யும் என்றும், மீனவா்கள் அடுத்த 3 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இதுகுறித்து மீனவா்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com