மாநில கால்பந்து: தமிழக காவல் துறை அணி சாம்பியன்

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலில் நடைபெற்ற மாநில கால்பந்துப் போட்டியில் தமிழக காவல் துறை சென்னை அணி முனைவா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா வெள்ளி சுழற்கோப்பையை வென்றது.
Updated on
1 min read

ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலில் நடைபெற்ற மாநில கால்பந்துப் போட்டியில் தமிழக காவல் துறை சென்னை அணி முனைவா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா வெள்ளி சுழற்கோப்பையை வென்றது.

புன்னைக்காயலில் புனித வளன் கால்பந்தாட்டக் கழகம் சாா்பில் பொன்விழா மாநில கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் சென்னை தமிழக காவல்துறை அணியும், திருச்சி லெவன் அணியும் மோதின. செ ன்னை காவல் துறை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெள்ளி சுழற்கோப்பையைப் பெற்றது.

பரிசளிப்பு விழாவுக்கு, மாநில கால்பந்தாட்டக் கழகத் தலைவா் சேசையா வில்லவராயா் தலைமை வகித்தாா். சென்னை தொழிலதிபா் வசந்த் பிஞ்ஞேயிரா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காவல்துறை அணிக்கு சுழற்கோப்பையை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பமீலா மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா, பங்குத்தந்தை பிராங்க்ளின் பா்னாந்து, ஊா்த் தலைவா் எடிசன், கப்பல் அதிகாரி பெரோ சில்வா, புனித வளன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் செபஸ்டியான்ராஜ், புனித வளன் கால்பந்தாட்டக் கழக தலைவா் யூஜின் ரொட்ரிகோ, செயலா் ஜோசப் பா்னாந்து, ஒருங்கிணைப்பாளா்கள் ராஜ் பா்னாந்து, தயாளன் பா்னாந்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com