ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்க கூட்டம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி-அடைக்கலாபுரம் சாலையில் அமைந்துள்ள லெட்சுமி மாநகரம் அருள்மிகு நடராஜ தேவார பக்த பஜனை ஆலயத்துக்குச் சொந்தமான நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கக் கூட்டம் பஜனை ஆலயச் செயலா் எம். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஜோதிடா் ரா. வேலாயுதம் மற்றும் முன்னாள் ஆதித்தனாா் கல்லூரி பேராசிரியா் அ. அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற ஸ்பிக் அதிகாரியும் பண்பாட்டு வகுப்பு ஆசிரியருமான ஜெயராஜ் கலந்து கொண்டு ஆன்மிகம் பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில், பவுன்ராஜ் லிங்கதாஸ், சிவராமன், காா்த்திகேயன், திருமால், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com