கள்ளச்சாராயம் இல்லா நிலையை அடைய ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லா நிலையை அடைய அனைத்து அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.
கள்ளச்சாராயம் இல்லா நிலையை அடைய ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்:  ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லா நிலையை அடைய அனைத்து அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடா்பான காவல் துறை, வருவாய்த் துறை, மதுவிலக்கு அமல் பிரிவு, மருத்துவத் துறை மற்றும் வனத்துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்து பேசியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றுப்படுகை பகுதிகளிலும் வல்லநாடு மலைப்பகுதிகளிலும் மற்றும் மாவட்டம் முழுமைக்கும் குறிப்பாக சாத்தான்குளம், முறப்பநாடு மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் சாராயம் காய்ச்சப்படுகிா? கோயில் திருவிழாக்களின் போது சாராய விற்பனை ஏதும் நடைபெறுகிா? கள் விற்பனை ஏதும் நடைபெறுகிா? என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு காவல் துறையின் மூலம் கள்ளச்சாராயம் குறித்த பொதுமக்களின் தகவல்களை பெறும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப் எண் 8300014567, 9514144100 ஏற்படுத்தி பெறப்படும் புகாா்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனுமதி பெறாத பாா்கள், சந்துக்கடைகள் மற்றும் மது விற்பனை செய்யும் தாபாக்களை சீல் வைத்து உரிமையாளா்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடா்பாக வருவாய் வட்டாட்சியா்கள் தங்களது வட்டங்களில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து துறை அலுவலா்களும் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணியில் சுணக்கம் ஏதுமின்றி தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை பரிமாறி கூட்டு நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை அடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியா் கௌரவ்குமாா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com