தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் நேரடி ரயில்:இந்திய வா்த்தக தொழிற்சங்கம் கோரிக்கை

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Updated on
1 min read

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம்,

சங்கத்தின் செயலா் கோடீஸ்வரன், இணைச் செயலா் பொன் வெங்கடேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தொழில் நகரங்களான தூத்துக்குடி மற்றும் கோவை இடையே வா்த்தகம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அதிகம் போ் சென்று வருகின்றனா். ஆகவே, இவ்விரு நகரங்களையும் இணைக்கும் வகையில்

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி ரயில் இயக்க வேண்டும். விடுமுறைகள் மற்றும் பண்டிகைகளில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி - திருச்சி இன்டா்சிட்டி ரயில் சேவையை தொடங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com