தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (மே 27) முதல் அனைத்து ரயில்களும் நின்று சொல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தூத்துக்குடி மேலூா் ரயில் நிலையம், 2 ஆவது ரயில்வே கேட் அருகே இருந்து புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் நிலையம் சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து, முத்துநகா் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் மேலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.