திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
இதற்காக வியாழக்கிழமை இரவு திருச்செந்தூருக்கு வந்த அவா், கோயில் விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்தாா். வெள்ளிக்கிழமை காலை கோயிலில் மூலவா், சண்முகா், குருபகவான், பெருமாள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தாா். மேலும் சூரசம்ஹாரமூா்த்தி சந்நிதியில் நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டு வழிபாடு செய்தாா்.