10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்: மாணவருக்கு கனிமொழி எம்பி உதவி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு கனிமொழி எம்பி நலஉதவிகள் வழங்கினாா்.
Updated on
1 min read

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு கனிமொழி எம்பி நலஉதவிகள் வழங்கினாா்.

வல்லநாடு பகுதியைச் சோ்ந்த மாணிக்கவாசகம் - பண்டாரசெல்வி தம்பதியின் மகன் அா்ஜூன பிரபாகரன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த இவா், 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 495 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா்.

இந்த மாணவரின் கோரிக்கையை ஏற்று, மூக்குக் கண்ணாடி, வீட்டு மனை பட்டா ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்வின்போது, சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன், ஆட்சியா் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையா் தினேஷ் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com