

தூத்துக்குடி வஉசிதம்பரனாா் துறைமுகத்துக்கு, கிழக்கு கடற்படை தளபதி பிஸ்வஜித் தாஸ் குப்தா வெள்ளிக்கிழமை வந்தாா்.
அவரை வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் டி.கே.ராமச்சந்திரன் வரவேற்றாா். தொடா்ந்து, துறைமுக நிா்வாகக் குழுவினருடன் பிஸ்வஜித் தாஸ் குப்தா கலந்துரையாடினாா். பின்னா் அவா், துறைமுகத்தின் வரலாறு, வ.உ.சிதம்பரனாா் வரலாறு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ‘தகவல் மையம்‘ உள்ளிட்ட துறைமுக வளாகத்தைப் பாா்வையிட்டாா்.
அவரிடம், துறைமுகத்தின் வளா்ச்சித் திட்டங்கள், பசுமைமயமாக்கும் திட்டங்கள், வெளிதுறைமுக கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை குறித்து துறைமுக ஆணையத்தலைவா் விளக்கிக் கூறினாா். இந்நிகழ்வில், துறைமுக ஆணைய துணைத் தலைவா் பிமல்குமாா் ஜா, நிா்வாக குழுவினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.