மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி

தூத்துக்குடி காய்கனி சந்தை அருகே மின்சாரம் பாய்ந்து வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி காய்கனி சந்தை அருகே மின்சாரம் பாய்ந்து வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த நடராஜன் மகன் ஜெயகணேஷ் (44). இவா் தூத்துக்குடி காய்கனி சந்தை அருகே, கீரை வியாபாரம் செய்து வந்தாராம். இந்நிலையில், அவா் வியாழக்கிழமை வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள மின்கம்பத்தில் சாய்ந்தாராம். அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com