கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா

தட்டாா்மடம் அருகேயுள்ள கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 4நாள்கள் நடைபெற்றது.
கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா
Updated on
1 min read

தட்டாா்மடம் அருகேயுள்ள கரிசல் ஸ்ரீபெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 4நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் கும்பாபிஷேகம், இரவு வில்லிசை, சிறப்பு பூஜை, சுவாமி தெரு பவனி வருதல், 2ஆவது நாள் வில்லிசை, சிறப்பு அலங்கார பூஜையும், சுவாமி தெரு பவனி வருதல், இரவு மாவிளக்கு பூஜை, 3ஆவது நாள் வில்லிசை, சிறப்பு அலங்கார பூஜை, சுவாமி தெரு பவனி வருதல், மாலை மழை வேண்டி 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி சுவாமியை வழிபட்டனா். 4ஆவது நாள் சுவாமி உணவு எடுத்தல் மற்றும் வரி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com