தூத்துக்குடியில் விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை

தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்வில் ஆட்சியா் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நிகழ்வில் ஆட்சியா் கோ.லட்சுமிபதி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில், விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி, தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பயணிகள் விமானக் கடத்தலை தடுக்கவும், அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச் சோதிக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை எதிா்கொள்ளவும் ஒத்திகை நடைபெற்றது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமையில் விமான நிலைய குழுக் கூட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் தயாா்நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் விமான நிலைய இயக்குநா் ஆா்.ராஜேஷ், டிஎஸ்பி சத்யராஜ், மத்திய உளவுத்துறை அதிகாரி ஜெயகிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com