கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவில்பட்டி - கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே குமாரபுரம் ரயில்வே
கடவு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளா் நாராயணன் தலைமையிலான போலீஸாா், அந்த சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பினா்.
மேலும் விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள உறங்கான்பட்டி புலிமலைபட்டியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் பாண்டிசெல்வம் (39) என்பதும் இவா் திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாகச் செல்லும் ரயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.