ஒளவையாா் விருது பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்க டிச. 10 கடைசி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒளவையாா் விருது பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒளவையாா் விருது பெற தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024ஆம் ஆண்டுக்கான உலக மகளிா் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒரு நபருக்கு ஒளவையாா் விருது, 8 கிராம்(22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சான்று வழக்கி கெளரவிக்கப்படுவா். விண்ணப்பிப்பவா், தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவராக இருத்தல் ஆகிய தகுதியுடையோா் இணையதளத்தில் வரும் டிச. 10ஆம் தேதிக்குள், மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461-2325606 என்ற தொலை பேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com