உலகக் கட்டடக் கலை தின விழா

தூத்துக்குடி மீளவிட்டான் நூலகத்தில் உலகக் கட்டடக் கலை தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலகக் கட்டடக் கலை தின விழா
Updated on
1 min read

தூத்துக்குடி மீளவிட்டான் நூலகத்தில் உலகக் கட்டடக் கலை தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதா் ஃபைவ் ரோஸ் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நூலகா் நாச்சியாா் தலைமை வகித்தாா். கட்டடக் கலை வல்லுநா் முகம்மது ஹயாஸ் கட்டடக் கலையின் முக்கியத்துவம், தமிழக அரசின் கட்டட விதிகள், தண்ணீா் சிக்கனம், மறுசுழற்சி ஆகியவை குறித்து விளக்கினாா். இதில், கட்டடக் கலை புத்தக கண்காட்சியும் நடைபெற்றது.

நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான தொகை ஆகியவை அறக்கட்டளை சாா்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை அனைத்தையும் சைகை மொழி மூலம் குட் ஷெப்பா்ட் காது கேளாதோா் பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியா் சுபா விளக்கினாா். ஆசிரியா் சில்வி நன்றி கூறினாா். இதில், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com