ஆறுமுகனேரியில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

ஆறுமுகனேரியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

ஆறுமுகனேரியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் செந்தில் தலைமையில் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன், போலீஸாா் ரோந்து சென்றபோது, காயல்பட்டினம் ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக பைக்கில் நின்றிருந்தவா்களைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் காயல்பட்டினம் நடராஜன் மகன் காா்த்திக் ராஜா (20), ஆறுமுகனேரி பேயன்விளையைச் சோ்ந்த பால்ராஜ் மகன் செல்வக்குமாா் (20) என்பதும், அவா்கள் விற்பதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com