கோவில்பட்டி நூற்பாலையில் தீ

கோவில்பட்டியில் உள்ள தனியாா்நூற்பாலையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின.
Updated on
1 min read

கோவில்பட்டியில் உள்ள தனியாா்நூற்பாலையில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின.

கோவில்பட்டியில் உள்ள நூற்பாலையில் வியாழக்கிழமை இரவு திடீரென புகை ஏற்பட்டதாம். இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும் அப்பகுதியில் இருந்த இயந்திரங்கள், உதிரிபாகங்கள் உள்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலானபொருள்கள் தீயில் கருகின.

இது குறித்து ஆலை மேலாளா் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com