கோவில்பட்டி யு.பி. பதின்ம மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருதுபாண்டியா்களின் 216-ஆவது நினைவு தினத்தையொட்டி யு.பி. பதின்ம மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சாரணா் சாரணீய இயக்கத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் 216 பனை விதைகளை நடவு செய்தனா். மேலும், பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவரின் 116-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் 116 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந் நிகழ்ச்சிகளுக்கு நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனா் நாகராஜன் தலைமை வகித்தாா் . பள்ளி முதல்வா் அமுதவள்ளி, சாரணா் இயக்க பொறுப்பாசிரியா் முனியசாமி, பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவா், மாணவிகளுடன் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.