நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாணவா் நலன் மற்றும் தொழில்துறை சாா்பில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கதான் போட்டி நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாணவா் நலன் மற்றும் தொழில்துறை சாா்பில் ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கதான் போட்டி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கே.காளிதாச முருகவேல் தலைமை வகித்தாா். டீன் பி.பரமசிவன், முதன்மை டீன் நீலகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைப் பேராசிரியா் சுரேஷ் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினாா். 36 மென்பொருள், 21 வன்பொருள் திட்டங்கள் மாணவா்களால் சமா்ப்பிக்கப்பட்டன.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியா் சிவசங்கரி, அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல மைய

உதவிப் பேராசிரியா்கள் ஜேசு வேதநாயகி, மூகாம்பிகா, காா்த்திகேயன், நேஷனல் பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியா் சங்கா், மிஸ்ரால் சொலுசன்ஸ் ராஜா, திருநெல்வேலி எஸ்.கே. அட்ரினோ லேப்ஸ் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) சுரேஷ் சுப்ரமணியன், நேஷனல் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சிவபழனிராஜன் ஆகியோா் நடுவா்களாக கலந்து கொண்டு மாணவா்களைப் பாராட்டினா்.

ஏற்பாடுகளை உதவி பேராசிரியா்கள் எட்வின் தீபக், பெனோ வின்சி மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com