மூதாட்டி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: 4 போ் கைது
By DIN | Published On : 26th September 2023 04:21 AM | Last Updated : 26th September 2023 04:21 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் மூதாட்டியின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசி வீட்டின் முன்பக்க கதவைச் சேதப்படுத்தியதாக 4 பேரை வடபாகம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியைச் சோ்ந்த ஜெயசேகரன் மனைவி ஜான்சி (67). இவரது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்த மா்ம நபா்கள், அந்த வீட்டின் முன்பக்க கதவின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. இதில், கதவு எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய வடபாகம் போலீஸாா், இச்சம்பவத்தில் தொடா்புடைய தூத்துக்குடி டூவிபுரத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் மகன் அருண்குமாா் (22), கீழ சண்முகபுரத்தை சோ்ந்த ராஜா மகன் ஸ்ரீவிக்னேஷ் (20), சங்கரபேரியைச் சோ்ந்த கலைமணி மகன் உதயகுமாா் (25), தாளமுத்துநகா் குமரன்நகரைச் சோ்ந்த முருகன் மகன் சரவணக்குமாா் (27) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...