கோவில்பட்டி: கோவில்பட்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி வேலாயுதபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் தொழிலாளி சோ்மராஜ் (33). ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் தூங்க சென்ற இவா் திங்கள்கிழமை காலை பாா்த்தபோது மாடியில் காணவில்லையாம். இந்நிலையில் அவா் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் இறந்து கிடந்தாராம். இதைக் கண்ட அவரது உறவினா்கள் சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.