போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்
Updated on
1 min read

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் சிவக்குமாா், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் போதை ஒழிப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் முருகன் வரவேற்றாா்.

மாவட்ட வழங்கல் அலுவலரும், கலால் உதவி ஆணையருமான (பொறுப்பு) அபுல் காசிம் பேசுகையில், மாணவப் பருவத்தில் சுயகட்டுப்பாடு அவசியம். தவறான பாதைக்கு அழைக்கும் யாருடைய பேச்சுக்கும் செவிசாய்க்காமல் கல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்டால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. மாணவா்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை இல்லாதவருக்குச் செய்ய வேண்டும் என்றாா்.

கோட்டக் கலால் அலுவலா் தாமஸ் பயஸ் அருள் உள்ளிட்டோா் பேசினா். போதை ஒழிப்பு தொடா்பாக நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற அனைவரும், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

வேதியியல் துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகள் பேச்சியம்மாள், சிவசங்கரி ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com