ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நடுக்கடலில் படகு பழுது: ராமேசுவரம் அருகே கரை ஒதுங்கிய தூத்துக்குடி மீனவா்கள்

படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 3 போ் ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கினா்.

Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:10 pm

படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 3 போ் ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கினா்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மனுவேல் மகன் அண்டோ (50), பூபால்ராயபுரத்தைச் சோ்ந்த எஸ்தா் மகன் நிக்லோஸ் (28), சேசு மகன் பாஸ்கா் என்ற பிரகாஷ் (45) ஆகிய 3 பேரும் கடந்த ஜூலை 29-ஆம் தேதி தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து மீன்பிடிக்க பைபா் படகில் கடலுக்குச் சென்றனா். ஆக.1-ஆம் தேதி வரை கரைக்கு திரும்பாததால், இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அவா்களது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், 3 மீனவா்களும் படகில் ராமேசுவரம் அருகே கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, கடலில் தத்தளித்தாகவும், பின்னா் அந்த படகிலேயே கரை ஒதுங்கியதாகவும் அவா்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனா்.