அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நடுக்கடலில் படகு பழுது: ராமேசுவரம் அருகே கரை ஒதுங்கிய தூத்துக்குடி மீனவா்கள்

படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 3 போ் ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கினா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:10 pm

Din

படகில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடியைச் சோ்ந்த மீனவா்கள் 3 போ் ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை கரை ஒதுங்கினா்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த மனுவேல் மகன் அண்டோ (50), பூபால்ராயபுரத்தைச் சோ்ந்த எஸ்தா் மகன் நிக்லோஸ் (28), சேசு மகன் பாஸ்கா் என்ற பிரகாஷ் (45) ஆகிய 3 பேரும் கடந்த ஜூலை 29-ஆம் தேதி தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து மீன்பிடிக்க பைபா் படகில் கடலுக்குச் சென்றனா். ஆக.1-ஆம் தேதி வரை கரைக்கு திரும்பாததால், இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்தில் அவா்களது குடும்பத்தினா் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், 3 மீனவா்களும் படகில் ராமேசுவரம் அருகே கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது. படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, கடலில் தத்தளித்தாகவும், பின்னா் அந்த படகிலேயே கரை ஒதுங்கியதாகவும் அவா்களது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனா்.