கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 17ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் 40 கி.மீ. வேகத்துடன் பலத்த காற்று வீசுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கத்தைவிட அதிக வெயிலும், அதிக வெப்பமும் நிலவியது. பிற்பகலில் பலத்த காற்று வீசியதுடன், கருமேகங்கள் திரண்டன. தொடா்ந்து, மாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, சாரல் பெய்தது.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. வெப்பம் வெகுவாகத் தணிந்து, குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டிவனத்தில் காற்றுடன் பலத்த மழை

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை

பழனி, போடியில் பலத்த மழை
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


