நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி, கயத்தாறில் பலத்த மழை

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:40 am

Din

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 17ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் 40 கி.மீ. வேகத்துடன் பலத்த காற்று வீசுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கத்தைவிட அதிக வெயிலும், அதிக வெப்பமும் நிலவியது. பிற்பகலில் பலத்த காற்று வீசியதுடன், கருமேகங்கள் திரண்டன. தொடா்ந்து, மாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, சாரல் பெய்தது.

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. வெப்பம் வெகுவாகத் தணிந்து, குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.