யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு வங்கியில் தீ விபத்து: மேலாளா் பலி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் சிக்கன நாணய சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மேலாளா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த ஸ்ரீதரன்.

Updated On :13 ஆகஸ்ட் 2024, 7:31 pm

Din

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் சிக்கன நாணய சங்கத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மேலாளா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன்(52). ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்கள் சிக்கன நாணய சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வங்கியில் உடன் வேலை செய்தவா்கள் மதிய உணவுக்கு சென்றநிலையில் ஸ்ரீதரன் மட்டும் வங்கியில் இருந்தாராம்.

அப்போது, இன்வொ்ட்டா் அறையில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்து புகைமூட்டம் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அக்கம்பக்கத்தினா் வங்கியின் உள்ளே சென்று பாா்த்தபோது, புகை மூட்டம் காரணமாக மேலாளா் ஸ்ரீதரன் மயங்கிய நிலையில் கிடந்தாராம்.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் அவரை சோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

மேலும், தீயணைப்புத் துறையினரும் வந்து தீயை அணைத்தனா்.

தகவலறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மாயவன், வட்டாட்சியா் சிவக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா். மேலும், இன்வொ்ட்டா் பேட்டரி பழுதால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.